ஜூலை முதல் வருமான வரியை மீள அறவிட அமைச்சரவை அனுமதி

by Staff Writer 25-06-2020 | 1:35 PM
Colombo (News 1st) எதிர்வரும் ஜூலை மாதம் தொடக்கம் வருமான வரியை மீள அறவிட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (25) இடம்பெற்ற, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் ரமேஸ் பத்திரண இந்த விடயம் தொடர்பில் தௌிவுபடுத்தினார். நாடு மூடப்பட்டிருந்த காலப்பகுதியில் செலுத்தப்படவிருந்த வருமான வரியை செலுத்த தவறியவர்களுக்கான அபராதத்தை அறவிடாதிருக்க ஏற்கனவே அரசாங்கம் தீர்மானித்திருந்தது என ரமேஷ் பத்திரண கூறினார். எனினும் எதிர்வரும் ஜுலை மாதம் தொடக்கம் மீளவும் வருமான வரியை அறவிட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டார். இதேவேளை, எதிர்வரும் 6 மாதங்களுக்கு இறக்குமதி மற்றும் அந்நிய செலாவணி தொடர்பில் ஏற்படவுள்ள மாற்றங்கள் தொடர்பான வர்த்தமானியை நிதி அமைச்சு விரைவில் வௌியிடும் என ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.