சீசெல்ஸில் சிக்கியிருந்த 254 பேர் நாடு திரும்பினர்

சீசெல்ஸில் சிக்கியிருந்த 254 பேர் நாடு திரும்பினர்

by Staff Writer 25-06-2020 | 5:01 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சீசெல்ஸ் நாட்டில் சிக்கியிருந்த 254 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர். இன்று பகல் ஒரு மணியளவில் இவர்கள் நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கடமைநேர முகாமையாளர் குறிப்பிட்டார். நாடு திரும்பியவர்களுக்கு விமான நிலையத்தில் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.