கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2000 ஐ கடந்தது

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2001 ஆக பதிவானது

by Chandrasekaram Chandravadani 25-06-2020 | 6:13 AM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2001 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்றைய தினம் (24) 10 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில் 7 பேர் அமெரிக்காவிலிருந்து வருகை தந்துள்ளதுடன், ஏனைய மூவரும் கடற்படை உறுப்பினர்கள் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, மேலும் 14 கொரோனா நோயாளர்கள் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர் அதற்கமைய இதுவரை 1,562 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளனர்.