by Staff Writer 25-06-2020 | 3:27 PM
Colombo (News 1st) COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 09 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2010ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் 397 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர்.
இதேவேளை, COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 40 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1602 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.