by Staff Writer 24-06-2020 | 8:09 PM
Colombo (News 1st) ஹரின் பெர்னாண்டோ மற்றும் வடிவேல் சுரேஷிற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு எதிர்வரும் 08 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் இரண்டு உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் வாகனங்களை தனிப்பட்ட ரீதியில் பயன்படுத்துதல், விற்பனை செய்தல் சங்கத்தின் நிதியை முறையற்ற விதத்தில் கையாள்தல் , கடன் பெறுதல் உள்ளிட்ட விடயங்களுக்கு ஹரின் பெர்னாண்டோ மற்றும் வடிவேல் சுரேஷ் ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.