Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,998 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்று (23) மாத்திரம் 40 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் 29 பேர் மும்பையிலிருந்து நாட்டுக்கு வருகை தந்த இந்தியர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏனைய 11 பேரும் அமெரிக்காவிலிருந்து நாட்டுக்கு வருகை தந்தவர்களாவர்.
இந்நிலையில், தொற்றுக்குள்ளான மேலும் 14 பேர் குணமடைந்துள்ளனர். இதன் அடிப்படையில், நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,562 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 425 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.