நாட்டில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று

2 நாட்களின் பின்னர் நாட்டில் ஒருவருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 23-06-2020 | 5:58 AM
Colombo (News 1st) இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,951 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் (22) ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். 2 நாட்களின் பின்னர் நாட்டில் தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டதுடன், மாலைதீவிலிருந்து வந்த ஒருவரே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நேற்றைய தினம் 28 பேர் தொற்றிலிருந்து குணமடைந்ததுடன் நாட்டில்  குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,526 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட 1,951 பேரில், தற்போது 414 நோயாளர்கள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 31 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.