மாத்தறையில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

மாத்தறை உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

by Staff Writer 23-06-2020 | 7:13 AM
Colombo (News 1st) மாத்தறை உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று (23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. மாத்தறை - கபடா வீதி, ஹக்மன வீதி, வேரகம்பிட்டிய, உயன்வத்த மற்றும் பிலிந்துவ ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படவுள்ளது. மாத்தறை - ஹக்மன வீதியில், நீர் விநியோகக் கட்டமைப்பில் முன்னெடுக்கப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக குறித்த பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படவுள்ளது.