கொரோனாவிலிருந்து மேலும் 22 பேர் குணமடைந்தனர்

கொரோனாவிலிருந்து மேலும் 22 பேர் குணமடைந்தனர்

by Staff Writer 23-06-2020 | 1:01 PM
Colombo (News 1st) நாட்டில் COVID - 19 தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 22 பேர் இன்று (23) குணமடைந்துள்ளனர். அதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,548 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,951 ஆக பதிவாகியுள்ளது. 2 நாட்களின் பின்னர் நாட்டில் தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டதுடன், மாலைதீவிலிருந்து வந்த ஒருவரே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 392 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.