by Staff Writer 22-06-2020 | 7:03 PM
Colombo (News 1st) சட்டவிரோதமாக 5 யானைகளை வைத்திருந்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் 4 பிரதிவாதிகள் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு மூவரடங்கிய விசேட நீதிமன்றத்தால் பிரதிவாதிகள் இன்று (22) விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வனஜீவராசிகள் திணைக்களத்தின் எழுதுவினைஞர் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளே இன்று விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந் நால்வருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கு போதுமான சாட்சியங்கள் இன்மையால் அவர்களை வழக்கிலிருந்து விடுவிக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்த வழக்கின் ஏனைய பிரதிவாதிகளாக அலி ரொஷான் என்றழைக்கபடும் நிரோஜ் ரொசான் உள்ளிட்ட நால்வருக்கு எதிரான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.