நாடளாவிய சுற்றிவளைப்பில் 20,802 பேர் கைது

நாடளாவிய சுற்றிவளைப்பில் 20,802 பேர் கைது

by Staff Writer 21-06-2020 | 1:47 PM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 20,802 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 6 ஆம் திகதி முதல் நேற்று (20) நள்ளிரவு வரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 5,110 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது ஹெரோயினை தம்வசம் வைத்திருந்த 3,551 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 2,609 பேர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐஸ் போதைப்பொருளுடன் 260 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சுற்றிவளைப்பின் போது கைத்துப்பாக்கிகள் மற்றும் வாள், கத்தி போன்ற கூரிய ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆயுதங்களுடன் 52 பேர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.