திக்கோவிட்ட கடலில் குளிக்கச் சென்ற நால்வர் பலி..

திக்கோவிட்ட கடலில் குளிக்கச் சென்ற நால்வர் நீரில் மூழ்கி உயிரிழப்பு 

by Staff Writer 21-06-2020 | 9:50 AM
Colombo (News 1st) வத்தளை - திக்கோவிட்ட கடற்பிராந்தியத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் உள்ளிட்ட நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர், நேற்று (20) மாலை திக்கோவிட்ட மயானத்திற்கு முன்பாகவுள்ள கடற்பிராந்தியத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். ஐவரும் நீரில் மூழ்கியதை அடுத்து கடற்படையினரும் பிரதேச மக்களும் இணைந்து அவர்களை மீட்டு ராகமை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் 3 யுவதிகளும் சிறுவன் ஒருவனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். புபுதுகம, உஸ்வெட்டக்கெய்யாவ மற்றும் ஹாலியெல பகுதிகளைச் சேர்ந்த 16, 20 மற்றும் 30 வயதான யுவதிகளும் கந்தானையைச் சேர்ந்த 14 வயதான சிறுவனும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். நீரில் மூழ்கிய மற்றுமொரு பெண், அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலங்கள் ராகமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.    

ஏனைய செய்திகள்