ஆபிரிக்க நாடுகளிலிருந்து 289 பேர் நாடு திரும்பினர்

ஆபிரிக்க நாடுகளிலிருந்து 289 பேர் தாயகம் திரும்பினர்

by Staff Writer 21-06-2020 | 7:34 AM
Colombo (News 1st) ஆபிரிக்க நாடுகளில் தொழில் புரிந்த 289 இலங்கையர்கள் இன்று (21) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் மூலம் இவர்கள் நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்துள்ளார். மடகஸ்கார், மொசாம்பிக், உகண்டா, கென்யா, ருவண்டா மற்றும் தன்சானியா ஆகிய நாடுகளில் ஹோட்டல்களில் பணிபுரிந்தவர்களும் இதில் அடங்குவதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் கூறியுள்ளார்.