by Bella Dalima 19-06-2020 | 3:28 PM
Colombo (News 1st) பஸ் சேவை தொடர்பிலான தொலைபேசி செயலியொன்றை அடுத்த வாரமளவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
தாமதமின்றி பொதுப்போக்குவரத்து சேவைகளை பயணிகள் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதன் பிரகாரம் பஸ்கள் நிறுத்துமிடம், நேரம் ஆகிய அனைத்து விடயங்களையும் குறித்த செயலி ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் Passenger App எனும் குறித்த செயலியை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.