சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

துபாயிலுள்ளவருடன் இணைந்து ஹெரோயின் கடத்தல்: சந்தேகநபரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

by Staff Writer 19-06-2020 | 5:49 PM
Colombo (News 1st) துபாயிலுள்ள ஒருவருடன் இணைந்து ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகநபரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய மினுவங்கொடை நீதவான் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. மினுவங்கொடை பதில் நீதவான் சாந்தனி தயாரத்ன முன்னிலையில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்ட போதே தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளரிடம் பெற்றுக்கொண்ட கட்டளையை பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மினுவங்கொடை பகுதியில் 500 கிராம் ஹெரோயின் மற்றும் துப்பாக்கியுடன் கடந்த 13 ஆம் திகதி சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். துபாயிலுள்ள ஒருவருடன் இணைந்து பாரிய அளவில் போதைப்பொருள் கடத்தலில் சந்தேகநபர் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.