by Staff Writer 19-06-2020 | 5:58 PM
Colombo (News 1st) கஞ்சிப்பானை இம்ரானின் தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கியமை தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு முகத்துவாரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சத்ஹிரு செவன தொடர்மாடி குடியிருப்பிற்கு அருகில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
19 வயதான இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 05 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட 4 பேரில் முதலாவது சந்தேகநபரான அனேஸ் ராஜா என்பவர் எதிர்வரும் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஏனைய மூன்று சந்தேகநபர்களும் 24 மணித்தியால தடுப்புக்காவலில் விசாரணை செய்ய நீதிமன்றத்திடம் பொலிஸார் அனுமதி பெற்றுள்ளனர்.
கொழும்பு மேலதிக நீதவான் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.