இந்திய உயர்ஸ்தானிகர் - பிரதமர் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் - பிரதமர் சந்திப்பு

by Staff Writer 19-06-2020 | 7:50 PM
Colombo (News 1st) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்துள்ளார். கடந்த 17 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது. இதேவேளை, சீன ஜனாதிபதியின் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியுடன் இலங்கைக்கான பதில் தூதுவர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை நேற்று (18) சந்தித்தனர். ஜூன் 20 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பிறந்த நாளுக்கான, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் வாழ்த்துச் செய்தி இதன்போது வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. COVID-19 தொற்றை ஒழிப்பது தொடர்பில் இலங்கை முன்னெடுத்துள்ள வெற்றிகரமான நடவடிக்கைகள், சீன ஜனாதிபதியின் வரவேற்பைப் பெற்றுள்ளதாக தூதுக்குழு இதன்போது ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளது.