சென்னையில் 12 நாட்களுக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம்

சென்னையில் இன்று முதல் 12 நாட்களுக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம்

by Bella Dalima 19-06-2020 | 5:01 PM
Colombo (News 1st) சென்னையில் இன்று முதல் 12 நாட்களுக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டத்தை முன்னிட்டு பொலிஸாரால் 18 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உரிய காரணமின்றி, முகக்கவசமின்றி, வாகனங்களில் பயணிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சென்னையிலேயே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 70 வீத கொரோனா நோயாளர்கள் சென்னையிலேயே பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.