மாளிகாவத்தையில் கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை மீது தாக்குதல் 

by Staff Writer 18-06-2020 | 7:39 AM
Colombo (News 1st) திட்டமிட்ட வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கஞ்சிப்பானை இம்ரான் என்பவரின் தந்தையை அடையாளந்தெரியாத சிலர் கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். மாளிகாவத்தை ஜூம்மா பள்ளிவாசல் சந்தியில் வைத்து அடையாளந்தெரியாத மூவர் கூரிய ஆயுதங்களால் குறித்த நபரை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குலில் காயமடைந்த கஞ்சிப்பானை இம்ரான் எனும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் நபரின் தந்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் பூராகவும் வெட்டுக் காயங்கள் காணப்படுவதாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார். தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர்களில் ஒருவர் வீதிப் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரியால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.