by Staff Writer 18-06-2020 | 11:03 AM
Colombo (News 1st) பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியுடன் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
பொலிஸ் பொதுமக்கள் இணைப்புப்பிரிவின் பணிப்பாளராகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளராகவும் ஜாலிய சேனாரத்ன கடமையாற்றுகிறார்.