by Staff Writer 18-06-2020 | 7:16 AM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,926 ஆக அதிகரித்துள்ளது.
இன்று இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் ரஷ்யாவில் இருந்தும் மற்றவர் பிரிட்டனிலிருந்தும் வருகை தந்தவர்களாவர்.
நேற்றைய தினம் (17) 9 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
சென்னையிலிருந்து திரும்பிய ஐவரும் பங்களாதேஷிலிருந்து வந்த இருவரும் கடற்படை உறுப்பினர்கள் இருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.