தொடர்ந்தும் தவறிழைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பாதுகாப்பு செயலாளர் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவிப்பு

by Staff Writer 18-06-2020 | 9:19 PM
Colombo (News 1st) தொடர்ந்தும் தவறுகள் இடம்பெற்றால், வேறு விதத்தில் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டி ஏற்படும் என பாதுகாப்புச் செயலாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இன்று சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவித்தார். தற்போது சிறைச்சாலை அதிகாரிகள் சிலர் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். கொழும்பில் நடைபெற்ற செயலமர்வொன்றிலேயே பாதுகாப்புச் செயலாளர் இதனைக் கூறினார்.