தேயிலைக்கான ஏற்றுமதி வரி இடைநிறுத்தம்

தேயிலைக்கான ஏற்றுமதி வரி 6 மாதங்களுக்கு இடைநிறுத்தம் 

by Staff Writer 18-06-2020 | 12:42 PM
Colombo (News 1st) தேயிலை ஏற்றுமதியின் போது ஒரு கிலோகிராமிற்காக அறவிடப்படும் 3 ரூபா 50 சதம் வரியை, 6 மாதங்களுக்கு தற்காலிகமாக நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. தேயிலைத் துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண இதனைக் கூறியுள்ளார்.