கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் 12 மணி நேர நீர்வெட்டு

by Staff Writer 18-06-2020 | 8:11 AM
Colombo (News 1st) கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று (18) காலை 9 மணி முதல் 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. இதற்கமைய வெலிசறை, மஹபாகே, மாபோல, கந்தானை, நாகொட ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அத்துடன், கெரவலப்பிட்டி, மாத்தாகொட, கெரவலப்பிட்டி கைத்தொழில் வலயம், திக்கோவிட்ட, திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகம், போபிட்டிய, பமுணுகம, உஸ்வெட்டகெய்யாவ ஆகிய பகுதிகளிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக, நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.