இராஜினாமா செய்ததாக வௌியான தகவல் பொய்யானது

இராஜினாமா செய்ததாக வௌியான தகவல் பொய்யானது: மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு

by Staff Writer 18-06-2020 | 6:59 PM
Colombo (News 1st) மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை இராஜினாமா செய்ததாக வௌியாகியுள்ள தகவல் பொய்யானது என மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் W.D.லக்ஷ்மன் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் அவ்வாறான எவ்வித கோரிக்கைகளும் தன்னிடம் முன்வைக்கவில்லை என நியூஸ்ஃபெஸ்ட் வினவியபோது, மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் W.D.லக்ஷ்மன் பதிலளித்தார். தனக்கு அவ்வாறானதொரு எண்ணம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.