புருண்டியின் புதிய ஜனாதிபதி இன்று பதவியேற்கின்றார்

புருண்டியின் புதிய ஜனாதிபதி இன்று பதவியேற்கின்றார்

by Chandrasekaram Chandravadani 18-06-2020 | 10:46 AM
Colombo (News 1st) கிழக்கு ஆபிரிக்கா நாடான புருண்டியின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள எவரிஸ்டே தாயிஷிமியே (Evariste Ndayishimiye) இன்று (18) பதவியேற்கவுள்ளார். புருண்டி ஜனாதிபதி பியரி குருன்சிஸா (Pierre Nkurunziza) கடந்த 8 ஆம் திகதி மாரடைப்பினால் காலமானார். அன்னாரின் திடீர் உயிரிழப்பை தொடர்ந்து பதவியேற்க இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில், இந்த பதவியேற்பு வைபவம் இடம்பெறவுள்ளது. கடந்த 15 வருடங்களாக ஆட்சியில் இருந்த பியரி குருன்சிசா ஆகஸ்ட் மாதத்துடன் பதவியில் இருந்து விலகுவதற்குத் தீர்மானித்திருந்தார். காலஞ்சென்ற பியரி குருன்சிசா போன்றே, புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள எவரிஸ்டே தாயிஷிமியேவும் போராளிக் குழுவொன்றின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.