​தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்

by Staff Writer 17-06-2020 | 10:15 PM
Colombo (News 1st) ​தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது. பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகளின் செயலாளர்கள், அவர்களால் அதிகாரம் வழங்கப்பட்ட பிரதிநிதிகள் இன்றைய கலந்துரையாடலில் பங்கேற்றனர். COVID-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு மத்தியில் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுப்பது தொடர்பில் இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.