சிறைக்கு ஹெரோயின் கொண்டு சென்றவருக்கு ஆயுள் தண்டனை

வெலிக்கடை சிறைச்சாலைக்கு ஹெரோயின் கொண்டு சென்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

by Staff Writer 17-06-2020 | 5:52 PM
Colombo (News 1st) வெலிக்கடை சிறைச்சாலைக்கு ஹெரோயின் கொண்டு சென்ற பெண் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். 3.6 கிராம் ஹெரோயினை சூட்சுமமான முறையில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு சென்றமை மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டமை தொடர்பில் இந்த பெண்ணுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி மாளிகாகந்த நீதவானால் இந்த பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டமையால், இன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.