ஜனாதிபதியை சந்திக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவினர்

ஜனாதிபதியை சந்திக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் 

by Staff Writer 17-06-2020 | 7:20 AM
Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களிடையே இன்று (17) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மற்றும் அதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.