by Staff Writer 17-06-2020 | 6:06 AM
Colombo (News 1st) நாட்டில் COVID-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,920 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சென்னையில் இருந்து நாட்டிற்கு வருகை தந்தவர்களாவர்.
நேற்று (16) 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
கடற்படையைச் சேர்ந்த 6 பேர் மற்றும் ஈரானில் இருந்து வருகை தந்த நால்வர் இதில் அடங்குகின்றனர்.
இதேவேளை, COVID-19 தொற்றிலிருந்து 26 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதற்கிணங்க குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1937 ஆக அதிகரித்துள்ளது.