by Staff Writer 16-06-2020 | 10:50 AM
Colombo (News 1st) ஜெர்மனில் நிலைகொண்டுள்ள அமெரிக்க படையினரை மீள அழைக்கும் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தத் திட்டத்தின் பிரகாரம் 9,500 அமெரிக்க படையினர் மீள அழைக்கப்படவுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி நேட்டோவிற்கான கொடுப்பனவு தொடர்பில் ஜெர்மனி மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தங்களின் பாதுகாப்பு படையினருக்காக ஐரோப்பிய நாடுகள் அதிக நிதியை ஒதுக்க வேண்டும் என டொனால்ட் ட்ரம்ப் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார்.