குரண பகுதியில் ஹெரோயினுடன் கைதானவரை தடுத்து வைத்து விசாரிக்குமாறு உத்தரவு

by Bella Dalima 16-06-2020 | 3:12 PM
Colombo (News 1st) கட்டுநாயக்க - குரண பகுதியில் 6 கிலோகிராமிற்கும் அதிக நிறையுடைய ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட நபரை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நேற்றிரவு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 06 கிலோ 137 கிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி 6 கோடி ரூபாவிற்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்தனர். குரண பகுதியை சேர்ந்த மின் இணைப்பாளராக கடமையாற்றும் 45 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். குறத்த நபர் துபாயில் தொடர்பினைக் கொண்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதுடன், இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.