நாட்டில் 1,915 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் 1,915 பேருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 16-06-2020 | 6:52 AM
Colombo (News 1st) இலங்கையில் COVID -19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,915 ஆக அதிகரித்துள்ளது. இன்று இதுவரை 10 COVID -19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 6  பேர் கடற்படையினர், 4 பேர் ஈரானில் இருந்து வந்தவர்களாவர். கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 16 பேர் நேற்று (15) அடையாளம் காணப்பட்டனர். மாலைதீவிலிருந்து நாடு திரும்பிய 6 பேர், குவைத்திலிருந்து வந்து திருகோணமலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஐவர் மற்றும் முல்லைத்தீவு , இயக்கச்சி தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 3 கடற்படையினர் ஆகியோர் இதில் அடங்குகின்றனர். நேற்றைய தினம்  55 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 1371 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் 11 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.  

ஏனைய செய்திகள்