வாள்வெட்டுக்கு இலக்கான 6 பேர் வைத்தியசாலையில்...

வவுனியாவில் வாள்வெட்டுக்கு இலக்கான 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி 

by Staff Writer 15-06-2020 | 2:59 PM
Colombo (News 1st) வவுனியா - மகாறம்பைக்குளம் பகுதியில் வாள்வெட்டுக்கு இலக்கான 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது காயமடைந்த 6 பேரும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பெண்னொருவரும் அடங்குவதாக வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் கே. நந்தகுமார் தெரிவித்துள்ளார். வாள்வெட்டு நடத்தப்பட்ட வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிள்களையும் முச்சக்கரவண்டியையும் சந்தேகநபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். சம்பவத்துடன் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேநபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வவுனியா தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.