by Staff Writer 14-06-2020 | 9:44 AM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இதுவரை 176 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.
தாக்குதல் தொடர்பில் இதுவரை 771 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் H.N.B.P. ஹேரத் கூறியுள்ளார்.
கலகொட அத்தே ஞானசார தேரர், நாளைய தினம் (15) இரண்டாவது தடவையாகவும் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகவுள்ளார்.
இதேவேளை, காத்தான்குடி பகுதியில் கடந்த காலங்களில் இடம்பெற்ற கடும்போக்குவாத செயற்பாடுகள் குறித்து நாளை மறுதினம் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.