அட்லாண்டா பொலிஸ் தலைமை அதிகாரி இராஜினாமா

அட்லாண்டா பொலிஸ் தலைமை அதிகாரி இராஜினாமா

by Staff Writer 14-06-2020 | 12:41 PM
Colombo (News 1st) அமெரிக்காவின் அட்லாண்டாவில் பொலிஸ் தலைமை அதிகாரி பதவியை இராஜினாமா செய்துள்ளார். அட்லாண்டாவில் 27 வயதான ரேஷாட் புரூக்ஸ் (Rayshard Brooks) எனும் ஆபிரிக்க - அமெரிக்க பிரஜை கடந்த வாரம் பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் Rayshard Brooks இன் கொலைக்கு நீதி கோரி அங்கு ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றன. இதேவேளை, அமெரிக்காவின் மின்னசொட்டாவில் பொலிஸ் அதிகாரி ஒருவரால் கொல்லப்பட்ட ஜோர்ஜ் ப்ளொய்ட்டின் கொலைக்கு நீதி கோரி பல்வேறு நாடுகளிலும் 3 வாரங்களாக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.