கொழும்பின் சில பகுதிகளில் 15 மணி நேர நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் 15 மணி நேர நீர்வெட்டு

by Staff Writer 14-06-2020 | 6:52 AM
Colombo (News 1st) கொழும்பின் சில பகுதிகளில் இன்று (14) காலை 9 மணி தொடக்கம் 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ், நீர்க்குழாய் திட்டத்தை விரிவாக்கும் நடவடிக்கைகளினால் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதனடிப்படையில் கொழும்பு 2, 3, 7, 8 மற்றும் 10 ஆகிய பகுதிகளில் காலை 9 மணி தொடக்கம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதேவேளை, காலை 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையான குறித்த காலப்பகுதிக்குள், கொழும்பு 1 இல்  குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.