ஹங்வெல்லயில் துப்பாக்கிச்சூடு: விசாரணை ஆரம்பம்

ஹங்வெல்லயில் முச்சக்கரவண்டி சாரதி மீது துப்பாக்கிச்சூடு: விசாரணைகள் ஆரம்பம்

by Staff Writer 13-06-2020 | 5:52 PM
Colombo (News 1st) ஹங்வெல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்றிரவு 6 மணி முதல் 7 மணி வரையான காலப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த ஒருவர் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளார். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் 34 வயதுடைய, வெலிப்பில்லாவ பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர் அவிசாவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.