நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு

நாளை முதல் நள்ளிரவு 12 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை மாத்திரமே ஊரடங்கு அமுல்

by Staff Writer 13-06-2020 | 3:23 PM
Colombo (News 1st) ஊரடங்கு சட்டம் நாளை (14) முதல் இலகுபடுத்தப்படுவதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. அதற்கமைய, நாளை 14 ஆம் திகதி முதல் தினமும் நள்ளிரவு 12 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை மாத்திரமே ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த அறிவித்தல் மறு அறிவித்தல் வரை அமுலாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அரச மற்றும் தனியார் துறையினர் தங்களின் தொழிலை முன்னெடுக்கும் போது, கொரோனா ஒழிப்பிற்கான சுகாதார வழிமுறைகளை பின்பற்றுதல் அவசியம் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.