24 மணித்தியாலங்களில் 11,458 பேருக்கு தொற்று

இந்தியாவில் 24 மணித்தியாலங்களில் 11,458 பேருக்கு கொரோனா தொற்று

by Bella Dalima 13-06-2020 | 5:12 PM
Colombo (News 1st) இந்தியாவில் இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 11,458 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் ஒரேநாளில் பதிவாகிய அதிகூடிய தொற்றாளர்களில் எண்ணிக்கை இதுவாகும். அத்துடன், குறித்த காலப்பகுதியில் 386 கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளன. இதனையடுத்து, இந்தியாவில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,08,993 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,884 ஆக உயர்ந்துள்ளது. தொற்றுக்குள்ளானவர்களில்1,54,330 பேர் குணமடைந்துள்ள நிலையில், 1,45,779 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதேவேளை, உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ,25, 282 ஆக பதிவாகியுள்ளது. அத்துடன், உலகளாவிய ரீதியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 76,32,517 ஆக அதிகரித்துள்ளது. ஐரோப்பாவில் 23,63,538 பேருக்கும், இலத்தீன் அமெரிக்க நாடுகளில் 15 ,69,938 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.