பம்பலப்பிட்டியில் விபத்து: இருவர் காயம்

பம்பலப்பிட்டியில் விபத்து: அரச புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இருவர் காயம்

by Staff Writer 12-06-2020 | 3:13 PM
Colombo (News 1st) பம்பலப்பிட்டியில் டிபென்டர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் அரச புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இருவர் காயமடைந்துள்ளனர். நேற்றிரவு இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த இருவரும் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் டிபென்டர் வாகனத்தின் சாரதி மதுபோதையில் இருந்ததாகவும் அவர் சட்டம் பயிலும் மாணவர் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, பாணந்துறை தெற்கு பகுதியில் பொல்கொட ஆற்றில் காரொன்று வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட காரில் பயணித்த 28 வயதான யுவதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காரின் சாரதி காப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.