by Staff Writer 12-06-2020 | 3:41 PM
Colombo (News 1st) பல்கலைக்கழக நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலான இறுதித் தீர்மானம் எதிர்வரும் சனிக்கிழமை (13) வௌியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து நேற்று (11) அனைத்து துணை வேந்தர்களையும் அழைத்து கலந்துரையாடியதாக ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
துணைவேந்தர்களின் ஆலோசனைகள் இன்றைய தினம் மீளாய்வு செய்யப்படவுள்ளது.
பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பீடங்களின் இறுதி ஆண்டு பரீட்சைகளை எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.