தூத்துக்குடியில் மன்னார் மீனவர்கள் எழுவர் கைது

தூத்துக்குடியில் மன்னார் மீனவர்கள் எழுவர் கைது

by Staff Writer 11-06-2020 | 7:07 PM
Colombo (News 1st) தமிழகம் - தூத்துக்குடியில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 7 பேர் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி- லூர்தம்மாள்புரத்தில் இலங்கையைச் சேர்ந்த சிலர் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, பொலிஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது, மன்னாரை சேர்ந்த 7 மீனவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. தூத்துக்குடி - தாளமுத்துநகர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு, மீனவர்களின் ஆவணங்களை ஆராய்ந்த போது, அவர்களின் விசாக்கள் காலாவதியாகியிருந்தமை தெரியவந்துள்ளது. இலங்கையை சேர்ந்த ஏழு மீனவர்களிடமும் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.