கொள்ளையிட்ட வைத்தியருக்கு விளக்கமறியல்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொள்ளையிட்ட வைத்தியருக்கு 24 ஆம் திகதி வரை விளக்கமறியல்

by Staff Writer 11-06-2020 | 3:59 PM
Colombo (News 1st) போலி துப்பாக்கி ஒன்றை காண்பித்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 79 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட வைத்தியர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 24 ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 24 ஆம் திகதி அவரை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கணக்காய்வுப் பிரிவிற்குள் நுழைந்த வைத்தியர், 79,35,437 ரூபா பணத்தை கொள்ளையிட்டு தப்பிச்சென்ற போது கைது செய்யப்பட்டார். அரச வைத்தியசாலையொன்றில் பணியாற்றிய வைத்தியர் ஒருவரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.