ராஜித சேனாரத்னவுக்கு பிணை 

ராஜித சேனாரத்னவுக்கு பிணை 

by Staff Writer 10-06-2020 | 10:19 AM
Colombo (News 1st) விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் வழக்கு இன்று (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிணை வழங்கப்பட்டுள்ளது. 5 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் ராஜித சேனாரத்னவை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.