நாட்டில் 1859 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் 1859 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

by Staff Writer 10-06-2020 | 6:54 AM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,859 வரை அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (09) கொரோனா தொற்றாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் ஒருவர் கடற்படையைச் சேர்ந்தவர் என்பதுடன் மற்றையவர் கத்தாரில் இருந்து வருகை தந்தவராவார். இதேநேரம், கொரோனா தொற்றுக்குள்ளான 791 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன், வைரஸ் தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,057 ஆக அதிகரித்துள்ளது.