அதிகாரி அனுமதியுடனே நாட்டிற்குள் பிரவேசித்தார்

தூதரக அதிகாரி அமைச்சின் பூரண அனுமதியுடனே நாட்டிற்குள் பிரவேசித்தார்: அமெரிக்க தூதரகம்

by Staff Writer 10-06-2020 | 6:42 PM
Colombo (News 1st) PCR பரிசோதனையை புறக்கணித்த அமெரிக்க தூதரக அதிகாரி, வௌிநாட்டலுவல்கள் அமைச்சின் பூரண அனுமதியுடனே நாட்டிற்குள் பிரவேசித்ததாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் 05 ஆம் திகதி திருத்தம் மேற்கொள்ளப்பட்ட சுகாதார வழிமுறைகள் அனைத்தையும் குறித்த அதிகாரி பின்பற்றியுள்ளதாக அமெரிக்க தூதரகம் நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு தெரிவித்தது. நாட்டிற்கு வருகை தந்த தூதரக அதிகாரி, தன்னை வீட்டிற்குள் சுய தனிமைப்படுத்தியுள்ளதாகவும் அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.