ஜோர்ஜ் ஃப்ளொய்டின் இறுதிச்சடங்கு நிறைவு

ஜோர்ஜ் ஃப்ளொய்டின் இறுதிச்சடங்கு நிறைவு

by Chandrasekaram Chandravadani 10-06-2020 | 8:50 AM
Colombo (News 1st) ஜோர்ஜ் ஃப்ளொய்டின் (George Floyd) இறுதிச்சடங்கு அவரது சொந்த நகரான ஹூஸ்டனில் இடம்பெற்றது. ஹூஸ்டனில் அமைந்துள்ள The Fountain of Praise Church இல் இறுதி ஆராதனைகள் இடம்பெற்றன. இறுதி ஆராதனையில், ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் உட்பட அந்தக் கட்சியின் பிரமுகர்கள் மற்றும் குடியரசுக் கட்சியின் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். அத்துடன், ஃப்ளொய்டின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்களும் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டிருந்தனர். பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் ஜோர்ஜ் ஃப்ளொய்டின் பூதவுடல், நல்லடக்கத்திற்காக குதிரை வண்டியில் எடுத்துச்செல்லப்பட்டது. அமெரிக்காவில் George Floyd என்ற கறுப்பின பிரஜை ஒருவர் பொலிஸ் அதிகாரி ஒருவரால் கடந்த 25 ஆம் திகதி கொல்லப்பட்டார். அவரது கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன பாகுபாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அமெரிக்காவின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.