by Staff Writer 10-06-2020 | 11:07 AM
Colombo (News 1st) இரத்மலானை - சொய்சாபுர பகுதி ஹோட்டலொன்றில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்துவதற்காக சிலரை அழைத்துவந்த காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண புலனாய்வுப்பிரிவினால் பிலியந்தலையில் நேற்றிரவு நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கி பிரயோகத்துக்காக வருகைதந்த காரும் பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
50 வயதுடைய ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கல்கிசை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.
கடந்த 29 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் இதுவரை 6 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.