சொய்சாபுர துப்பாக்கி சூடு: வாகனத்துடன் ஒருவர் கைது

சொய்சாபுர துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய வாகனத்துடன் ஒருவர் கைது

by Staff Writer 10-06-2020 | 11:07 AM
Colombo (News 1st) இரத்மலானை - சொய்சாபுர பகுதி ஹோட்டலொன்றில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்துவதற்காக சிலரை அழைத்துவந்த காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண புலனாய்வுப்பிரிவினால் பிலியந்தலையில் நேற்றிரவு நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கி பிரயோகத்துக்காக வருகைதந்த ​காரும் பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. 50 வயதுடைய ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கல்கிசை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார். கடந்த 29 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் இதுவரை 6 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.