சரணாலயங்கள், பூங்காக்களை  மீள திறக்க  தீர்மானம்

சரணாலயங்கள், பூங்காக்களை 15 ஆம் திகதி முதல் மீள திறக்க அரசாங்கம் தீர்மானம்

by Staff Writer 10-06-2020 | 6:35 PM
Colombo (News 1st) நாட்டிலுள்ள அனைத்து சரணாலயங்கள், உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்களை எதிர்வரும் 15 ஆம் திகதி தொடக்கம் மீள திறக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, சுற்றாடல் மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன இந்த விடயம் தொடர்பில் தௌிவுபடுத்தினார். உள்ளூர் மற்றும் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக எதிர்வரும் 15 ஆம் திகதி தொடக்கம் தேசிய சரணாலயங்களை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். சுகாதார துறையினரால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துவது கட்டாயம் எனவும் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன குறிப்பிட்டுள்ளார்.